திருக்குறள்

1.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

திருக்குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

பொருள்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வரததாசனார் உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.